பஜனை செய்வதாகக் கூறி யார் கேட்டாலும் அனுமதிப்பீங்களா? மதுரை ஹைகோர்ட் அதிரடி!
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் மூலம் கூடாரம் அமைக்கப்பட்டதை தொல்லியல் துறை ஏன் தடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video

மதுரை: தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் மூலம் கூடாரம் அமைக்கப்பட்டதை தொல்லியல் துறை ஏன் தடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சார்பில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மண்டபங்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விளக்கம் அளித்தது
நேற்றே இந்த வழக்கில் பதில் அளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பு, தங்களுக்கு விழா நடத்த தொல்லியல் துறைதான் அனுமதி வழங்கியது என்று கூறியது. மத்திய தொல்லியல்துறையும் கோவில் நிர்வாகமும் அனுமதி வழங்கிய காரணத்தால் எங்கள் மீது தவறு இல்லை என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பு விளக்கம் அளித்தது.

என்ன பதில்
ஆனால் இந்த வழக்கில் ஆஜாரான மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பு விளக்கத்தை மறுத்தனர். அதில், நாங்கள் பந்தல் போட, தியான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கவில்லை. பஜனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கினோம் என்று கூறியது.

சரமாரி கேள்வி
இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் மத்திய தொல்லியல்துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை கேட்டனர். அதன்படி பெரிய கோவிலில் கூடாரம் அமைக்கப்பட்டதை தொல்லியல் துறை ஏன் தடுக்கவில்லை? கோவில் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. உங்கள் அனுமதி இல்லாமல் எப்படி கூடாரம் அமைக்கப்பட்டது.

பஜனை
பஜனை செய்வதாகக் கூறி யார் அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா?.இந்த விழா ஏற்பாடுகளை கண்காணித்தது யார். எதன் அடிப்படையில் அனுமதி அளித்தீர்கள், என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications