மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம்.. துளசிராம் 2ம் இடம்!
மதுரை : மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவு பெற்றது. இதில் 14 காளைகளை அடக்கிய நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டி துளசிராம் 2ம் இடம் பிடித்தார். இவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவது தைப் பொங்கல் பண்டிகைகள் கடந்த 13ம் தேதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் பண்டிகையான இன்று மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது. அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி பொங்கல் திருநாளன்று (நேற்று) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 1100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாமிடம் பிடித்தார். 13 காளைகளை அடக்கி திருப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடம் பிடித்தார். சிறந்த காளைக்கான முதல் பரிசினை விகே சசிகலாவின் மாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த நிலையில் இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்தப் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர். சுமார் 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன்பின்னர் தான் போட்டி தொடங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பின்னர் அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5.45 மணிக்கு முடிவுக்கு வந்தது. இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்தார். பொதும்புவை சேர்ந்த பிரபா 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார்.
இதில் அதிக மாடுகளை பிடித்து வென்ற நத்தம் பார்த்தீபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கும் கார் பரிசாக கிடைக்கிறது. 2வது இடம் பிடித்த மஞ்சம்பட்டி துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் வழங்கும் டிராக்டர் மற்றும் 2வது பரிசாக சிறந்த காளையின் உரிமையாளருக்கு நாட்டின பசு மற்றும் கன்று வழங்கப்பட்டது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications