Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம்.. துளசிராம் 2ம் இடம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவு பெற்றது. இதில் 14 காளைகளை அடக்கிய நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டி துளசிராம் 2ம் இடம் பிடித்தார். இவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவது தைப் பொங்கல் பண்டிகைகள் கடந்த 13ம் தேதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் பண்டிகையான இன்று மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது. அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

jallikattu palamedu madurai

அதன்படி பொங்கல் திருநாளன்று (நேற்று) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 1100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாமிடம் பிடித்தார். 13 காளைகளை அடக்கி திருப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடம் பிடித்தார். சிறந்த காளைக்கான முதல் பரிசினை விகே சசிகலாவின் மாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் காளை நெஞ்சில் முட்டியதில் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த நிலையில் இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்தப் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர். சுமார் 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன்பின்னர் தான் போட்டி தொடங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பின்னர் அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

jallikattu palamedu madurai

பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5.45 மணிக்கு முடிவுக்கு வந்தது. இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்தார். பொதும்புவை சேர்ந்த பிரபா 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார்.

இதில் அதிக மாடுகளை பிடித்து வென்ற நத்தம் பார்த்தீபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கும் கார் பரிசாக கிடைக்கிறது. 2வது இடம் பிடித்த மஞ்சம்பட்டி துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் வழங்கும் டிராக்டர் மற்றும் 2வது பரிசாக சிறந்த காளையின் உரிமையாளருக்கு நாட்டின பசு மற்றும் கன்று வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+