அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. எந்த தேதியில் நடைபெறப்போகுது தெரியுமா?
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகள், எங்கே, எந்த தேதிகளில் நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது, தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.

கொரோனா பிரச்சினையால், இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஜல்லிக்காட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஒவ்வொரு போட்டியிலும் 300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications