மதுரை பஸ் ஸ்டாண்டில் திருதிருனு விழித்த 2 பெண்கள்.. கன்னியாகுமரி அஜித் குமார் கேவலம்.. தகித்த தக்கலை
மதுரை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம்தான் இன்றுவரை துணையாக இருந்து வருகிறது. அந்தவகையில், எத்தனையோ வழக்கறிஞர்கள், பெண்களின் நலனுக்காக நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்கள். ஆனால், கன்னியாகுமரியில் அஜித்குமார் என்ற வழக்கறிஞர் செய்த வேலையை பாருங்கள்.. இப்போது அஜித்குமார் போக்சோவில் கைதாகி உள்ளார். என்ன நடந்தது தக்கலையில்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இந்த பெண், தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 14 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருக்கிறார்கள். 2 பெண் குழந்தைகளும், அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு, 6ம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.

பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக, ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக இளம்பெண் வேலை பார்த்து வருகிறார்.. இந்த ரப்பர் தோட்டத்தில் , சில சமயங்களில் நைட் டியூட்டியும் வந்துவிடுவார்.
ஊரை சுற்றி பார்க்க ஆசை
அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் நைட் ஷிப்ட் பணிக்கு சென்றுள்ளார்.. அப்போது 2 பெண் குழந்தைகளும், இரவில் ஊர் சுற்றி பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்கள்.
பிறகு திடீரென தங்களது வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாமல் விழித்துள்ளனர். அதனால், ஒவ்வொரு தெருவாக சுற்றித்திரிந்துள்ளனர்.. அப்படியே தக்கலை பஸ் ஸ்டாண்டிற்கும் வந்துவிட்டார்கள். அங்கிருந்து எப்படி போவது என்று தெரியாமல் விழித்துள்ளனர்.. அப்போது நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது. அந்த நேரத்தில், அந்த வழியாக வழக்கறிஞர் அஜித்குமார் என்பவர் சென்றுள்ளார்..
வழக்கறிஞர் அஜித்குமார்
2 சிறுமிகளும் விழிப்பதை கண்ட வழக்கறிஞர் அஜித்குமார், நைசாக பேச்சு தந்துள்ளார்.. பிறகு, தன்னுடைய அலுவலகத்திற்கும் அழைத்து சென்றுள்ளார்.. இதில், 12 வயது சிறுமியை தனி ரூமில் அடைத்துவிட்டு, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், 2 சிறுமிகளையும், மறுபடியும் தக்கலை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து சென்று, மதுரை செல்லும் பஸ்ஸில் ஏற்றியுள்ளார்.. அப்போது, நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார் அஜித்குமார்... இதனிடையே தன்னுடைய 2 மகள்களையும் காணாமல், பெற்ற தாய் பதறிப்போய்விட்டார்.. மறுநாள் காலையில் இதுதொடர்பாக போலீசில் புகார் தந்தார்..
டீ கடையில் சிறுமிகள்
இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுங்கான்கடை பகுதியில் சிறுமிகள் 2 பேரும் இளைஞர் ஒருவருடன் பைக்கில் இருந்து இறங்கி, டீ குடித்துவிட்டு, மறுபடியும் பைக்கில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது.
அந்த இளைஞர் பெயர் அஜித்குமார் என்பதும், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் அஜித்குமாரையும் கைது செய்தனர்..
ஸ்மார்ட் போன்கள்
பிறகு சிறுமிகளை தேட துவங்கினார்கள்.. இந்த 2 சிறுமிகள் கையில் ஸ்மார்ட்போனை வைத்திருக்கிறார்களாம். அதனால், செல்போன் டவரை வைத்து சிக்னல் கண்காணிக்கப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் சிறுமிகளின் செல்போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. தக்கலையிலிருந்து மதுரை பஸ் ஸ்டாண்டில் சிறுமிகள் இறங்கியதுமே, அங்கு செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு, செல்போனையும் ஆன் செய்துள்ளனர்.
அப்போதுதான், செல்போன் சிக்னல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமிகளை மீட்ட காவல்துறையினர், பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, இந்த வழக்கை மார்த்தாண்டம் மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றினார்கள்.. இதையடுத்து மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கறிஞர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications