கரூர் விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்.. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்!
மதுரை: கரூர் துயர சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிபிஐ விசாரணை கோரிய அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையை தொடக்க நிலையிலேயே, அதனை சிபிஐக்கு மாற்றும்படி எப்படிகேட்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒரு வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு, அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால், சிபிஐ விசாரணைக்கு மாற்றும்படி கோரலாம். ஆனால் தொடக்க நிலையிலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி எப்படி கேட்க முடியும்?
அதேபோல் எம்எல் ரவி ஒரு அரசியல்வாதி. அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல.. சிபிஐ விசாரணை கோர பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத மனுதாரருக்கு என்ன தகுதியுள்ளது? உங்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம். அதேபோல் கரூர் விவகாரம் தொடக்க நிலையில் இருப்பதால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்ததல்ல. கரூரில் உயிரிழந்த குடும்பங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.. யாராவது எண்ணி பார்த்தீர்களா? சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்எல் ரவியின் பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேபோல் சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி உள்ளிட்டோர் தொடர்ந்த அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு











Click it and Unblock the Notifications