இளைஞர் அஜித்குமார் வழக்கு.. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட்.. தமிழக காவல்துறை நடவடிக்கை!
சிவகங்கை: மடப்புரம் கோவில் காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் மரணம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் திருட்டு வழக்கில் விசாரணை மேற்கொள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கிய நிலையில், அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சிவகங்கை மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை காவலர்கள் சீருடை கூட அணியாமல் அஜித்குமாரை மடப்புரம் காளியம்மான் கோயில் பின்புறம் பைப்பை வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர், தண்ணீர் கூட கொடுக்காமல் வாயில் மிளகாய் பொடியை கொடுத்து அடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சூழலில், டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications