நிலம் பதிவு செய்யப் போறீங்களா? சார் பதிவாளருக்கு ’அதற்கு’ பவரே இல்லை! அதிரடியாக உத்தரவிட்ட ஹைகோர்ட்
சென்னை: பத்திரப் பதிவு செய்யும் சொத்துகளின் வழிகாட்டு மதிப்பு வேறுபாட்டு தொகையை தணிக்கை அறிக்கை அடிப்படையில் சார் பதிவாளர்கள் நேரடியாக வசூலிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நரீன்பானு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் "வீட்டு மனைக்கான முத்திரை தாள் கட்டண பாக்கியை செலுத்தக்கோரி, அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து, கட்டண பாக்கி அடிப்படையில் வில்லங்கச் சான்றிதழில் இடம் பெற்றுள்ள குறிப்புகளை நீக்கக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "சார் பதிவாளர் நேரடியாக பற்றாக்குறை முத்திரைத் தாள் கட்டணத்தை கோர முடியாது என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தணிக்கை ஆட்சேபனையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பற்றாக்குறை முத்திரை கட்டணத்தை கேட்டு சார் பதிவாளர் நேரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது சட்டவிரோதம். எனவே மனுதாரருக்கு சார் பதிவாளர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது"என உத்தரவிட்டுள்ளார்.

சொத்துப் பதிவில் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. சொத்தை வாங்கும் போது நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் இது. சொத்து பரிவர்த்தனையில் மாநில அரசு முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை விதிக்கிறது. இந்த மதிப்பு ஒரு மாநிலத்திற்கு மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும். அதேபோல், நீங்கள் தமிழ்நாட்டில் ஒரு சொத்தை வாங்கியிருந்தால், தமிழ்நாடு முத்திரை வரி சட்டத்தின்படி முத்திரை வரி செலுத்த வேண்டும்.
இது தென் மாநிலங்களில் அதிக முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். எனவே, தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்கள் சொத்தை பதிவு செய்யும் போது குறிப்பிடத்தக்க தொகையை செலுத்த தயாராக இருக்க வேண்டும். பொதுவாக, சொத்து மதிப்பில் சுமார் 1% பதிவு கட்டணமாக செலுத்தப்படுகிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில், இது சொத்து மதிப்பில் 4% ஆகும். இந்திய முத்திரைத்தாள் சட்டம், 1899 மற்றும் தமிழ்நாடு முத்திரைத்தாள் சட்டம், 2019 ஆகியவற்றின் படி, சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடும் போதெல்லாம் வீடு வாங்குபவர் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்த வேண்டும். சொத்தைப் பிரித்தல், குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் மற்றும் மறுவிற்பனை செய்தல் போன்றவற்றில் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications