குனால் ஷா வாட்ஸ்அப் சிஇஓ பதவிக்கு செல்ல என்ன காரணம்..? இந்தியாவை டார்கெட் செய்யும் மெட்டா?
"ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏன் ஒருவர் ஏற்கிறார்?" என்ற கேள்விக்கு பல பதில்கள் இருக்கலாம். ஆனால், CRED நிறுவனத்தின் நிறுவனர் குனால் ஷா எடுத்திருக்கும் முடிவு, இந்திய ஃபின்டெக் உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சுமார் 1.7 கோடி பயனர்களைக் கொண்ட CRED நிறுவனத்திலிருந்து விலகி, 50 கோடிக்கும் அதிகமான இந்திய பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைமைப் பொறுப்பை குனால் ஷா ஏற்றுள்ளார். இதற்குப் பின்னால் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் மெட்டா, பேமெண்ட் துறையை அடுத்து க்ரோத் இன்ஜின் ஆகவும், பண மழையை கொட்டும் இடமாகவும் பார்கிறது. இதை எட்ட வேண்டும் என்ற காரணத்திற்காகவே குனால் ஷா முக்கிய பொறுப்பை ஏற்கிறார். தற்போது இந்திய யூபிஐ துறையை கூகுள் பே மற்றும் போன்பே 80 சதவீத ஆதிக்கத்துடன் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆதிக்கத்தை உடைக்கும் விதமாக வாட்ஸ்அப்-ஐ உருவாக்க குனால் ஷா இறங்கிவிடப்பட்டு உள்ளார்.

கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குனால் ஷா, வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, கிரெட் நிறுவனத்தில் சுமார் 20% பங்குகளை 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.8,550 கோடி) மதிப்பில் வாங்க உள்ளது.
குனால் ஷா ஏன் வாட்ஸ்அப்புக்கு செல்கிறார்?
குனால் ஷா 2018-இல் கிரெட் நிறுவனத்தைத் தொடங்கினார். கிரெடிட் கார்டு பில் செலுத்தும் முறையில் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வரவும், கடனை உரிய நேரத்தில் செலுத்தினால் கூடுதல் பலன் கொடுக்கும் முயற்சியில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பேண்மென்ட் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இப்போது குனால் ஷா வாட்ஸ்அப்-பின் உலகளாவிய தலைவராக செல்வது, மெட்டா நிறுவனம் பேமெண்ட் துறையை தனது அடுத்த பெரிய வளர்ச்சி இயந்திரமாக பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது.
வாட்ஸ்அப் இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் பேமெண்ட் சேவையான வாட்ஸ்அப் பே, இந்தியாவில் UPI பரிவர்த்தனைகளில் வெறும் 0.65% மட்டுமே பங்கு வகிக்கிறது. இதே சமயம், கிரெட் நிறுவனம் (1.7 கோடி பயனர்கள் மட்டுமே) 0.68% UPI பங்கை பெற்றுள்ளது.
இந்த இடைவெளிதான் பிரச்சனை
வாட்ஸ்அப்-இல் பெரிய அளவிலான பயனர்கள் இருந்தாலும், மக்கள் அதில் பணம் செலுத்தும் பழக்கத்தை உருவாக்கவில்லை. ஆனால் கிரெட், கிரெடிட் கார்டு பில் சரியான நேரத்தில் செலுத்துபவர்களுக்கு ரிவார்டு அளிப்பதன் மூலம் நம்பிக்கையை உருவாக்கியது.
இந்த நம்பிக்கை இடைவெளியைத் தான் குனால் ஷா இப்போது வாட்ஸ்அப்பில் 30 மடங்கு பெரிய அளவில் சரி செய்ய வேண்டியுள்ளது. பெரிய அளவிலான பயனர்கள் இருப்பது மட்டும் போதாது, அவர்களிடம் பணப் பரிவர்த்தனை பழக்கத்தை உருவாக்குவது தான் சவால். இதை தான் குனால் ஷா வாட்ஸ்அப் பே-வில் சரி செய்ய போகிறார்.
கிரெட்-க்கு என்ன பயன்?
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிரெட் நிறுவனம் 900 மில்லியன் டாலர் முதலீட்டை பெறுகிறது. இதில் சுமார் 500 மில்லியன் டாலர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், 400 மில்லியன் டாலர் முதலீட்டாளர்களுக்கு பகுதி வெளியேற்றமாகவும், ESOP பங்குகளை திரும்ப வாங்குவதற்காகவும் பயன்படும்.
குனால் ஷா வெளியேறிய பிறகு, கிரெட்-இல் 2020-இல் இணைந்த மிதேன் சம்பத் இடைக்கால CEO-வாக பொறுப்பேற்க உள்ளார். அவர் முன்னதாக உத்திகள் மற்றும் நிதி பிரிவை தலைமையேற்று நடத்தி வந்தார். இதே போல் இந்த முதலீட்டுக்காக கிரெட் தனது பயனர் தகவலை வாட்ஸ்அப்-க்கு பகிராது எனவும் தெரிவித்துள்ளது கிரெட்
மெட்டா நிறுவனம் இந்தியாவில் பேமெண்ட் துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. குனால் ஷாவின் வருகை, வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications