மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் மாரடைப்பால் காலமானார்!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த மறைவை அவரது மருமகனும் மாநில கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்திருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நிலையில் 2018ம் ஆண்டு இதற்கான இடமாக மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டில் பிரதமர் மோடி இம்மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது வரை மதுரையில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படாத நிலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இதற்கான பாட வகுப்புகள் நடைப்பெற தொடங்கியது. இதற்கிடையில்தான் கடந்த அக்டோபர் மாதம் மதுரை எஸ்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தலைவரை மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி மதுரை வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் வெங்கட்ராமன் மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications