இனி தொழில் வளர்ச்சி எகிறப்போகுது.. டிச.7ல் வரும் அறிவிப்புக்கு முன்.. மதுரைக்கு வந்த நல்ல செய்தி!
மதுரை: மதுரை மேலூர் அருகே உள்ள வஞ்சிநகரம் பகுதியில் சிப்காட் நிறுவனம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வஞ்சிநகரில் சிப்காட் அமைப்பதற்கான உட்கட்டமைப்பு பணிகள் சுமார் 278 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொழில் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கேற்ப கோவை, ஒசூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகில் பூதமங்கலம், வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டியில் சுமார் 278 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது மதுரையின் முதல் சிப்காப் தொழில் பூங்காவாகும். இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, உட்கட்டமைப்புக்கான டெண்டர் பணிகளும் தொடங்கின. ரூ.67 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டி, தோல் அல்லாத காலனி, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே சிப்காட் அமைப்பதற்கான மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஜூலை மாதமே தமிழக அரசு விண்ணப்பித்தது. இது சில மாதங்களாகவே பரிசீலனையில் இருந்து வந்தது. இதனால் சிப்காட் தொடங்கும் பணிகள் தாமதமாகின. தற்போது மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து தொழில் பூங்காவில் சாலை, மழைநீர் வடிவால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
டிசம்பர் 7ஆம் தேதி மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு முதலீடுகள் பெரியளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் சிப்காட் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதனால் மதுரை தொழில் வளர்ச்சியில் அடுத்தக் கட்டத்தை அடையும் என்று பார்க்கப்படுகிறது.
-
தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்! -
மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications