இனி தொழில் வளர்ச்சி எகிறப்போகுது.. டிச.7ல் வரும் அறிவிப்புக்கு முன்.. மதுரைக்கு வந்த நல்ல செய்தி!
மதுரை: மதுரை மேலூர் அருகே உள்ள வஞ்சிநகரம் பகுதியில் சிப்காட் நிறுவனம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வஞ்சிநகரில் சிப்காட் அமைப்பதற்கான உட்கட்டமைப்பு பணிகள் சுமார் 278 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொழில் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கேற்ப கோவை, ஒசூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகில் பூதமங்கலம், வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டியில் சுமார் 278 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது மதுரையின் முதல் சிப்காப் தொழில் பூங்காவாகும். இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, உட்கட்டமைப்புக்கான டெண்டர் பணிகளும் தொடங்கின. ரூ.67 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டி, தோல் அல்லாத காலனி, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே சிப்காட் அமைப்பதற்கான மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஜூலை மாதமே தமிழக அரசு விண்ணப்பித்தது. இது சில மாதங்களாகவே பரிசீலனையில் இருந்து வந்தது. இதனால் சிப்காட் தொடங்கும் பணிகள் தாமதமாகின. தற்போது மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து தொழில் பூங்காவில் சாலை, மழைநீர் வடிவால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
டிசம்பர் 7ஆம் தேதி மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு முதலீடுகள் பெரியளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் சிப்காட் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதனால் மதுரை தொழில் வளர்ச்சியில் அடுத்தக் கட்டத்தை அடையும் என்று பார்க்கப்படுகிறது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications