மதுரை கலெக்டர் கார் ஜப்தி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் 1981 ஆம் வருடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தி வந்த வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.

மதுரை எல்லீஸ் நகரில் 12 பேருக்கு சொந்தமான 99 செண்ட் நிலத்தை 1981 ஆம் வருடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது.

Madurai District Collector car confiscated

உரிய காலகட்டத்தில் நிலத்திற்கான இழப்பீடு வழங்காததால் 1984 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பின் படி முதல் கட்டமாக 1999 ஆம் வருடம் 8 இலட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இழப்பீடு முழுமையாக வழங்கப்படாத காரணத்தால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி 8 இலட்சத்து 70 ஆயிரத்து 166 ரூபாய் 30 காசுகள் இழப்பீடு தொகைக்காக மாவட்ட ஆட்சியரின் 6 வாகனங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது.

Madurai District Collector car confiscated

தீர்ப்பின் படி நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்தனர.

தகவலறிந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தைக்காக நீதிமன்ற குழுவினரை அழைத்தார். இதன்படி தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்வழக்கில் 37 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+