பாஜகவிலிருந்து இன்று விலகுகிறார்- மதுரை டாக்டர் சரவணன்.. காலை ராஜினாமா செய்கிறார்!
மதுரை: பாஜகவிலிருந்து இன்று காலை விலகுவதாக அறிவித்துள்ள டாக்டர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்.
Recommended Video
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேசியக் கொடி ஏற்றிய காரில் பயணம் செய்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர சரவணன் தலைமையில் பாஜகவினர் கூட்டமாக இருந்ததை அமைச்சர் கண்டார்.

அரசு சார்பில் மரியாதை
இது அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, இங்கு ஏன் அவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வேண்டுமானால் வீரமரணமடைந்த லட்சுமணனின் வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தட்டும் என போலீஸாரிடம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக தெரிகிறது.

போலீஸார்
இதையடுத்து போலீஸார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருடன் பாஜக சரவணன் உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேலின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தேசியக் கொடி
தேசியக் கொடி ஏற்றப்பட்ட காரில் பயணம் செய்த அமைச்சரின் கார்மீது காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பிரச்சினையை பாஜகவுக்கு கொடுத்தது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நள்ளிரவில் அமைச்சர் பிடிஆர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

பாஜகவிலிருந்து விலகுகிறேன்
இதைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விலகல் கடிதம்
மேலும் தனது விலகல் கடிதத்தை இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார். எனவே இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். திமுகவில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு திமுக எனது தாய் வீடு, இணைந்தால் என்ன தவறு என கேட்டிருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைவது குறித்தும் இன்று தெரியவரும்.
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார்












Click it and Unblock the Notifications