மதுரையில் யோகா டீச்சரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வக்கீல்.. தற்கொலை.. 10 பக்கத்தில் பரபர கடிதம்
மதுரை: மதுரை திருமங்கலத்தில் யோகா ஆசிரியரை கொலைசெய்து வீட்டுக்குள் புதைத்த வக்கீல், குற்ற உணர்ச்சியில் ஒருமாதம் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் காவல்துறைக்கு 10 பக்கத்திற்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
Recommended Video
இதனிடையே காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் தான் தனது மகள் உயிர் பறிபோனதாக யோகா டீச்சர் சித்ரா தேவியின் தந்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகநகர் அருகே உள்ள ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்-(45) இவரது மனைவி விஜி-(35), இவர்களுக்கு ஹரி ஸ்ரீ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று ஹரிகிருஷ்ணன் தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வழக்கறிஞராக வேலை பார்த்துவருகிறார்.

சித்ரா தேவி
அதே போல் பசும்பொன் தெருவில் வசித்து வருப்பவர் சித்ராதேவி-(32) இவரது கணவன் தங்கராஜ்-(41), சித்ராதேவியும் கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து யோகா ஆசிரியராக பணிபுரிந்து தனது தந்தை கண்னையாவுடன் வாழ்ந்து வருகிறார்.

காதலானது
இந்த நிலையில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனின் மகள் ஹரி ஸ்ரீ சித்ராதேவியிடம் யோகா பயின்று வருகிறாள். தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சித்ரா தேவியிடம் சென்று வரும் சமயத்தில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் தலை மறைவாகியுள்ளார் என கூறப்பட்டு வந்தது.

காவல்நிலையத்தில் புகார்
இதனால் தந்தை கண்ணையா மகள் சித்ராதேவி காணாமல் போனதாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 05-ஆம் தேதியன்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். இதில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் பேசிய போன் ஆடியோவை போலீசாருக்கு கொடுத்துள்ளார்.

தற்கொலை
இதனை தொடர்ந்து ஹரிகிருஷ்ணனே தனது மகளை கொலை செய்து இருக்கலாம் என சித்ரா தேவியின் தந்தை கண்ணையா திருமங்கலம் துணைகண்காணிப்பாளர் வினோதிணியிடமும் மற்றும் மதுரை காவல் ஆணையர்க்கும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவினருக்கும் புகார் மனு அளித்துள்ளார். புகார் அளித்தும் காலம் தாழ்த்திய போலீசார் இது தொடர்பாக விசாரணை எதுவும் செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர்.

வாகனம் எங்கே
மேலும் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதப்பட்ட கடிதத்தையயும் போலீசார் கைப்பற்றியுள்ளனர், அவரை எழுதிய அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து கழிவறையில் வைத்து புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டைனையை ஏற்றுக் கொண்டதாகவும், மேலும் சித்ராதேவியின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் இருப்பதாகவும், அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

தந்தை குற்றச்சாட்டு
யோக ஆசிரியரை கொலை செய்து தனது வீட்டின் கழிவைறையில் கொலை செய்து புதைத்த சம்பவம் திருமங்கலம் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சித்ராதேவியை கழிவறைக்குள் புதைத்த இடத்தில் அவரது உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தனது மகளின் உயிர் பலியாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை குற்றம்சாட்டியதுடன், தங்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications