பொங்கலுக்கு கோரிப்பாளையம் பாலம் திறக்கப்படும்.. மதுரை மொத்தமா மாறப்போகுது.. எவ வேலு கொடுத்த அப்டேட்!
மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். மேலமடை மேம்பாலம் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறிய எவ வேலு, டிசம்பர் 7ஆம் தேதி அது முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளை திமுக திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில், பல்வேறு திட்டங்களை முடித்து திறந்து வைக்க ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில் மதுரையில் 2 பகுதிகளில் முக்கியமான மேம்பால பணிகள் நடந்து வருகிறது. மேலமடை மேம்பாலம் மற்றும் கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை அமைச்சர் எவ வேலு தீவிரப்படுத்தி இருக்கிறார். இந்த இரு மேம்பாலத்தின் பணிகளையும் அமைச்சர் எவ வேலு 9வது முறையாக ஆய்வு செய்தார். இதன்பின் இந்த 2 மேம்பாலங்களும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
அதில் எவ வேலு பேசுகையில், மதுரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற அடைப்படையில் மேலமடை மேம்பாலத்திற்கு ரூ.150 கோடியும், கோரிப்பாளையம் மேம்லாபத்திற்கு ரூ.190 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 950 மீட்டர் கொண்ட மேலமடை பாலப் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
இனி பெய்ண்ட், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகளே உள்ளன. இந்தப் பணிகாள் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் நிறைவடையும். இந்தப் பாலத்தை வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதேபோல் கோரிப்பாளையம் பாலப் பணிகள் நில எடுப்பு பிரச்சனையால் தாமதமாகி இருக்கிறது.
இந்தப் பாலத்தின் பணிகளை வரும் பொங்கல் பண்டிகைக்குன் முன் நிறைவடையும். இதனையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைப்பார். இதனை வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் கூறியுள்ளேன். மேம்பால பாதுகாப்புக்கு என்று தனி குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே திறக்கப்பட்டு வருகிறது.
இந்த இரு பாலங்களையும் கட்டி முடித்துவிட்டு மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் இடையிலான உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். அதன்பின் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அடுத்தடுத்த மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் மதுரை வருவார் என்பது உறுதியாகி இருக்கிறது.
-
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி!












Click it and Unblock the Notifications