கோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு
மதுரை: புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 8 மணி அளவில் துவங்கியது. இந்த போட்டி நடைபெறும் முன்பு டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
மதுரை அருகே பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. வாடிவாசலில் திறக்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க ஏராளமான வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த போட்டியை காண அமைக்கப்பட்டு இருந்த கேலரியில் ஏராளமான மக்கள், பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளித்து வருகிறார்கள்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியர் வினய், தென்மண்டல காவல்துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட எஸ்பி மணிவண்ணன், தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாலமேடு வாடிவாசல் பின்புறம் கால்நடைகளுக்கான இறுதி மருத்துவ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை முழு உடல் தகுதி பெற்றுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கால்நடைதுறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தெரிவித்தார். மேலும் காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அது மழுங்கடிக்கப்படும் என்றார்.
இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி நடந்தது. இதையடுத்து அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போட்டி தொடங்கும் முன்பு போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications