கண்ட இடங்களில் தொட்டு.. ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்! பதறிப் போய் புகாரளித்த மாணவிகள்! மிரண்ட மதுரை!
மதுரை: மதுரையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக ஆண் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான மாணவிகள் புகார் அளித்தும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபலமான அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வகுப்புகளின் போது ஆபாசமாக பேசுவதாகவும், மாணவிகளிடம் தவறான வீடியோக்களை காண்பித்து தொந்தரவு அளிப்பதாகவும் கூறி மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் கீழ் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை நகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாணவிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும், ஆண் ஆசிரியருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் துணை தலைமை ஆசிரியரும் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு உள்ளாக பிரச்சனையை உருவாக்கி இரு தரப்பாக மாற்றி விடுகிறார் எனவும் பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருகை தருகிறார்கள், அதனை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும், மாணவர்களுடைய பெற்றோர்களும் மாணவிகளை ஆபாசமாக தவறாக பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுவதாகவும் அதனால் பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடப்பதாகவும் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் மீது பாலியல் ரீதியான தொந்தரவு அளிப்பதாகவும் அதற்கு உதவியாக இருப்பதாகவும் கூறி புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகிய மூன்று பேர் மீது திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications