கண்ட இடங்களில் தொட்டு.. ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்! பதறிப் போய் புகாரளித்த மாணவிகள்! மிரண்ட மதுரை!
மதுரை: மதுரையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக ஆண் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான மாணவிகள் புகார் அளித்தும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபலமான அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வகுப்புகளின் போது ஆபாசமாக பேசுவதாகவும், மாணவிகளிடம் தவறான வீடியோக்களை காண்பித்து தொந்தரவு அளிப்பதாகவும் கூறி மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் கீழ் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை நகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாணவிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வருவதாகவும், ஆண் ஆசிரியருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் துணை தலைமை ஆசிரியரும் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு உள்ளாக பிரச்சனையை உருவாக்கி இரு தரப்பாக மாற்றி விடுகிறார் எனவும் பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருகை தருகிறார்கள், அதனை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும், மாணவர்களுடைய பெற்றோர்களும் மாணவிகளை ஆபாசமாக தவறாக பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுவதாகவும் அதனால் பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடப்பதாகவும் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் மீது பாலியல் ரீதியான தொந்தரவு அளிப்பதாகவும் அதற்கு உதவியாக இருப்பதாகவும் கூறி புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகிய மூன்று பேர் மீது திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications