கிண்டல், கேலி, சித்திரவதை.. மதுரையில் தற்கொலை செய்த மாணவர்களின் பரிதாபக் கதை!
Recommended Video

மதுரை: மதுரையில் 2 கல்லூரி மாணவர்கள் ராகிங் கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பரத் மற்றும் முத்துபாண்டி என்ற இரண்டு மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு படித்து வரும் ஜெய்சக்தி என்ற மாணவன் பரத், முத்துபாண்டி ஆகிய இரண்டு மாணவர்களையும் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார்.

அதேபோல் சக மாணவர்களும் ஜெய்சக்தி உடன் சேர்ந்து அடிக்கடி ராகிங் செய்து கொடுமைப்படுத்தியதாக தெரியவருகிறது. எப்போது பார்த்தாலும் கேலி, கிண்டல் செய்து சித்திரவதை செய்து வந்ததால் முத்துப் பாண்டி, பரத் ஆகிய இருவரும் மனம் உடைந்தனர். ஜெயசக்தியின் கொடுமை தாங்க முடியாமல் தொடர்ந்ததால் தற்கொலை செய்ய முடிவடுத்துள்ளனர்.
இதையடுத்து விஷம் வாங்கிச் சென்று வீட்டுக்குப் போய் குடித்துள்ளனர். மயங்கிய நிலையில் இருவரும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 நாட்களுக்கு முன்பு தீவிர சிகிச்சையில் இருந்த பரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துப்பாண்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது ஜெயசக்தியைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கல்லூரி முதல்வர் மற்றும் இறந்தவர்களின் பெற்றோர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராகிங் கொடுமையால் ஒரே கல்லூரியில் சேர்ந்த 2 மாணவர்கள் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications