Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் அளவெடுக்க வந்த டெயிலர்.. நறுக்னு கேட்ட மாணவி! கட்டாயப்படுத்திய ஸ்கூல்? பரபர சுப்ரமணியபுரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பள்ளி மாணவியிடம் யூனிபார்ம் அளவெடுக்கும்போது, டெயிலர் ஒருவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவி மதுரை நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் கீழ் ஆசிரியை மற்றும் இரண்டு டெய்லர்கள், மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். என்ன நடந்தது மதுரை சுப்பிரமணியபுரத்தில்?

மதுரையில் மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் ஆண் மற்றும் பெண் டெய்லர்களை அழைத்து வந்திருக்கிறார்கள்..

Madurai Subramaniapuram School Tailor

அளவெடுக்க வந்த பெண், ஆண் டெயிலர்கள்

இதையடுத்து, டைலர்கள் 2 பேரும், சீருடைகளை தைப்பதற்காக மாணவிகளிடம் அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 10ம் வகுப்பு படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், "மாணவிகளுக்கு அளவெடுப்பதற்கு, எதுக்காக ஆண் டெய்லரை அழைத்து வந்தீர்கள்? பெண் டெய்லர் மூலம் அளவெடுக்கலாமே? மாணவிகளுக்கு பெண்கள் மட்டுமே அளவெடுக்க வேண்டும்.. எனக்கு ஆண் டெயிலர் அளவெடுக்கக்கூடாது.. அப்போது தான் அடுத்தாண்டு இந்த பள்ளியில் படிக்க போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆண் டைலர் வேணாம்

ஆனால், அங்கிருந்த ஆசிரியை ஒருவர், ஆண் டைலரிடம்தான் அளவெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக வற்புறுத்தியதாக தெரிகிறது... இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் சொன்னதற்கு, ஜஸ்ட் Freeயா எடுத்துக்கோ என்று மாணவியிடம் சொல்லப்பட்டதாம். இறுதியில், ஆண் டெய்லர்தான், அந்த மாணவிக்கு அளவெடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும்போது தன்னுடைய உடல் பாகங்களை தொட்டார் என்றும், அவர் மீதும், என்னை கட்டாயப்படுத்திய ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 10ம் வகுப்பு மாணவி மதுரை நகர் மகளிர் போலீசில் புகார் தந்தார்..


டெயிலர்கள் மீது பாய்ந்த போக்சோ

மாணவியின் இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியை, அளவெடுத்த டெய்லர் மீதும், கட்டாயப்படுத்திய ஆசிரியை, உடந்தையாக இருந்த பெண் டெய்லர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள பள்ளி வாயிலை இந்திய மாணவர் சங்கத்தினரும், மகளிர் அமைப்பினரும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.. அப்போது பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இதில், மாணவர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இதையடுத்து, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதனால், மதுரை சுப்பிரமணியபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+