இறந்தும் உயிர் வாழும் இதயம்.! 'கடவுளாக மாறிய செல்வம்.. மதுரை டூ கோவை திக் திக் பயணம்
விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளால் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர்.
மதுரை: விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளால் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை மற்றும் புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.
விருதுநகரைச் சோ்ந்தவா் செல்வம் வயது 33. இவா், விருதுநகரில் அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதனால் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் சம்மதித்தனர்.
இதையடுத்து அவரது இதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும்
தானமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

திக் திக் பயணம்
இதைத்தொடர்ந்து அவரது இதயம், வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வியாழக்கிழமை புறப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார், உதவி ஆணையர் செல்வின் உட்பட 200 போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

ஆம்புலன்ஸ்கள்
மதுரையில் இருந்து சிந்தாமணி, சின்ன உடைப்பு, கப்பலூர், திண்டுக்கல் வழியாக கோவை தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அதேபோல், கல்லீரல் புதுக் கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் பாதுகாப்பு பணி காரணமாக சாலை சந்திப்புகளில் எந்த தடையுமின்றி ஆம்புலன்ஸ்கள் விரைவாக சென்றன.

புதுக்கோட்டை கல்லீரல்
மூளைச்சாவு அடைந்த செல்வத்தின் இதயம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது. இதேபோல் செல்வத்தின் கல்லீரல் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு பொறுத்தப்பட்டது. இதன் மூலம் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர்.

பால் விற்பனை
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரால் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி, ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ரோஸ் மகன் ஜேப்பி 42. இவர் அப்பகுதியில் பால் விற்பனை தொழில் செய்து வருகிறார்.

உறுப்புகள் தானம்
கடந்த 8ம் தேதி வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தவரை மீட்ட உறவினர்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த திங்கள்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, ஜேப்பியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பினார்கள் இதையடுத்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம் தானமாக கொடுத்தனர். கல்லீரல், வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், சிறுநீரகங்கள், இதயம் சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications