ஆட்சியில் பங்கு! மாணிக்கம் தாகூர் தலைமையிலான காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
மதுரை: ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆட்சியில் பங்கு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்திருந்தார். இருப்பினும், தொடர்ந்து காங்கிரஸ் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. தற்போது, ஆட்சியில் பங்கு கோரி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானத்தில், "ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதையும் அன்பையும்தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியை கொடுக்கிறது. ராகுல் காந்தி தமிழக முதலமைச்சரை சகோதரர் என்று அழைக்கிறார். அதேபோல எங்களுக்கும் மரியாதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அமைச்சர்கள் காங்கிரஸை வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்று கூறுகிறார்கள். கூட்டணி குறித்து அசால்ட்டாக பேசுகிறார்கள். இதெல்லாம் வலியை கொடுக்கிறது.
நாங்கள் உங்களோடு இருந்து நீங்கள் செய்த தவறுகளுக்காக பழைய சுமந்தவர்கள். எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான். திமுக மாவட்ட செயலாளர் தளபதி பேச்சு வருத்தமளிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20 நாட்கள் ஆகிவிட்டது. தற்பொழுதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மற்ற மாவட்ட செயலாளர்களும் பேசுகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது. எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்குவோம்.
பூத் கமிட்டியில் ஆள் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். நாங்கள் இதற்கான பட்டியலை ரெடி செய்திருக்கிறோம். பூத் கமிட்டி ஆட்களுக்கான கூட்டத்தை போட்டு நாங்கள் பலத்தை நிரூபிப்போம்" என்று பேசியிருக்கிறார்.
-
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!












Click it and Unblock the Notifications