Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாங் லீவ் முடியலை போல... இன்றும் மதுரை திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்காத அமைச்சர் பிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் இன்று திமுக இளைஞரணி- மருத்துவர் அணி- மாணவர் அணி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது சலசலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் தரக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20-ந் தேதி திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Minister Palanivel Thiagarajan not attend DMKs Madurai NEET Protet

ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால் அன்றைய தினம் மதுரையில் மட்டும் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவில்லை. இதனையடுத்து இன்று மதுரையில் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அமைச்சரும் மாவட்ட செயலாளர்களில் ஒருவருமான மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் பங்கேற்றனர். ஆனால் மதுரையை சேர்ந்த மற்றொரு அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பங்கேற்கவில்லை.

Minister Palanivel Thiagarajan not attend DMKs Madurai NEET Protet

இது தொடர்பாக நாம் திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, அமைச்சர் பிடிஆர் கடந்த 16-ந் தேதி தமது ட்விட்டர் பக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக மலேசியா செல்வதாகவும் இதற்காக தமக்கு விடுப்பு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனவும் பதிவிட்டிருந்தார். அதே கால கட்டத்தில் மதுரையில் டி.எம். சவுந்தரராஜன் சிலை, ராமநாதபுரத்தில் திமுக வாக்கு சாவடி முகவர் மாநாடு, ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாடு என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை அனைத்துமே முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகள். இதில் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை. தற்போது திமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்ற நிலையில் இன்றும் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை. ஒருவேளை முதல்வரிடம் கேட்டிருந்த லீவ் காலம் இன்னமும் முடியவில்லையோ என்னவோ என்றனர்.

அதேநேரத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஐ.டி. முன்னாள் மாணவர்களுடனான சந்திப்பு, காலை உணவு, புத்தக அன்பளிப்பு தொடர்பான படங்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+