அதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: அதிமுகவை யாரும் ஆட்டுவிக்கவில்லை என்றும், மக்கள் கையில் தான் கட்சி உள்ளது எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். தமிழக மக்களுக்காக தான் மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளதாகவும், அவ்வாறு இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும் என்றும் விளக்கம் அளித்தார். மக்களுக்கு நல்லது செய்ய வெண்டும், அவர்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் மத்திய பாஜக அரசுடன் தாங்கள் சுமூகமாக செல்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மறைந்த ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டவர் என்றும், அவர் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவும் தெரிவித்தார். இஸ்லாமியர்களுக்காக தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களையும், அறிவிப்புகளை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமைப்படுவதாக விமர்சித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களை பார்த்து திமுகவினர் வியந்துவருவதாக தெரிவித்தார்.
மதரீதியாக தமிழக மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த திமுக முயற்சித்து வருவதாகவும், இதனை கண்டிக்கும் நோக்கில் தான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கூட்டறிக்கை கூட வெளியிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவை பாஜக தான் இயக்கி வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடியோடு மறுத்த செல்லூர் ராஜூ, பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். இதனிடையே சட்டமன்றத்தில் முதல்வர் கேட்ட கேள்விக்கு, மு.க.ஸ்டாலினால் பதிலளிக்க முடியவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் திடீரென ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், ஸ்டாலின் இன்று மதுரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications