மதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
மதுரை: கொரோனா பாதித்த மதுரை நபருக்கு நேற்று மாலை முதல் சிகிச்சைகள் ஏற்கவில்லை என்றும் அவரது நிலை மோசமடைந்தது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அவர் இறந்தது எதனால் என்பது குறித்தும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது.
அதில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது.

விஜயபாஸ்கர்
உயிரிழந்த நபர் மதுரையைச் சேர்ந்தவர். அவருக்கு 54 வயதாகிறது. அவர் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3ஆவது நிலையை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

எப்படி கொரோனா
அவர் கூறுகையில் மதுரையைச் சேர்ந்த கொரோனா பாதித்த நபர் ஈரோட்டில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். அதனால் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இவர் மதுரையிலிருந்து எங்கெங்கு சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளோம் என தெரிவித்தார்.

உடல்நிலையை சீராக்க
இந்த நிலையில் அந்த நபர் இன்று அதிகாலை இறந்தது குறித்து அமைச்சர் தனது ட்விட்டரில் கூறுகையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை கோவிட் 19 நோயாளிக்கு நேற்று மாலை முதல் சிகிச்சைகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது நிலை மோசமாக இருக்கிறது. அவரது உடல்நிலையை சீராக்க போராடி வருகிறோம் என தெரிவித்திருந்தார்.

ஸ்டீராய்டு மருந்துகள்
இந்த நிலையில் அவரது மற்றொரு ட்வீட்டில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் நுரையீரல் பிரச்சினைக்காக நீண்ட காலமாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு அதிகளவு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் இருந்துள்ளது.
-
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications