உன்னை தொட்டு பார்த்தா போதும் ராசா.. ஸ்டாலின் கையை பிடித்து உருகிய பாட்டி!
மதுரை பிரச்சார கூட்டத்தில் மூதாட்டியுடன் முக ஸ்டாலின் கைகுலுக்கினார்.
Recommended Video
மதுரை: "உன்னை தொட்டு பார்த்தா போதும் ராசா.. " என்று முக ஸ்டாலினின் கையை இறுக்கி பற்றி கொண்டார் அந்த பாட்டி!
சமீப காலம்வரை கிராம சபை கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், இப்போது பிரச்சார கூட்டங்களுக்கு சென்று வருகிறார்.
இதன்காரணமாக, சில காலமாகவே அவர் மக்களிடம் நெருக்கத்திலேயே உள்ளார். செல்லும் இடமெல்லாம் ஸ்டாலினை நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டம் முண்டியடிக்கிறது.
நானும் வர்றேன்.. எடப்பாடியும் வரட்டும்.. கிராமத்துக்கு போறோம்.. உதயநிதி ஸ்டாலின் சவால்!
மனு எங்கே?
இப்படித்தான் கிராம சபை கூட்டம் ஒன்றில், கிராம மக்களிடம் ஸ்டாலின் கோரிக்கை மனுவினை பெற்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பாட்டி ஸ்டாலின் அருகில் வந்து நின்றார். "உங்க மனு எங்கம்மா" என்று கேட்க, அதற்கு பாட்டி, "மனுவெல்லாம் இல்லைப்பா.. உன்னை கிட்ட வந்து பாக்கணும்னு நெனச்சேன்" என்று சொல்லி விட்டு போனார்.
கட்சி நிர்வாகிகள்
இதேபோலதான் நேற்றும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மதுரையில் பிரச்சார மேடையில் இருந்தார் ஸ்டாலின். கீழே கூட்டம் பெருமளவு திரண்டு காணப்பட்டது. கட்சி நிர்வாகிகள் எல்லாம் கீழே நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். ஏராளமானோர் ஸ்டாலினை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார்கள்.
முன்னே சென்றார்
அப்போது கூட்டத்திலிருந்து ஒரே ஒரு பாட்டி மட்டும் மேடையை நோக்கி வந்தார். இதை கவனித்துவிட்ட ஸ்டாலின், தன்னை பார்க்கதான் பாட்டி வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, மேடையில் எழுந்து முன்னே சென்றார்.
நெகிழ்ச்சி
"உன்னை தொட்டு பாக்கதான் வந்தேன் ராசா" என்று சொன்ன பாட்டி கையை நீட்டினார். இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்டாலின் பாட்டியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். இது அங்கிருந்த அனைவரையுமே நெகிழ செய்துவிட்டது!