முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை.. மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு.இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம் என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்தவர் அப்துல் காதர் இப்ராஹிம். இவர் முதல்நிலை காவலராக உள்ளார். இவர் பணியின்போது தாடி வைத்துள்ளார். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததை சுட்டிக்காட்டி துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

madurai high court muslim police

அதுமட்டுமின்றி தாடி வைத்ததற்காக அப்துல் காதர் இப்ராஹிமிற்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், ‛‛காவல்துறையில் இஸ்லாமியர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு'' என கருத்து தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+