Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலா தேவிக்கு என்னாச்சு.. நெஞ்சுவலியா.. முதுகுவலியா.. மதுரையில் திடீர் பரபரப்பு

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நிர்மலாதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கினார்கள்.. மவுனத்தை கலைத்த நிர்மலாதேவி-வீடியோ

    மதுரை: உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு நிர்மலா தேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரையில், மருத்துவ கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்து செல்ல முற்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோ வெளியானது.

    இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கருத்து கூறவில்லை

    கருத்து கூறவில்லை

    இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக நிர்மலாதேவி அழைத்து வரப்படும் போதெல்லாம், எந்தவித கருத்தையும் கூறாமல் இருந்தவர், திடீரென 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

    அதிர்ச்சி தகவல்

    அதிர்ச்சி தகவல்

    அப்போது, "எனக்கு மிரட்டல்கள் இருக்கிறது. சிபிசிஐடி தயார் செய்த வாக்குமூலங்கள் எல்லாம் போலியானவை. எனக்கு ஜாமீன் வழங்காததற்கு மிகப்பெரிய அரசியல் சதியே இருக்கிறது" என்று போட்டு உடைத்தார். நிர்மலாதேவி இப்படி சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

    பசும்பொன் பாண்டியன்

    பசும்பொன் பாண்டியன்

    இது சம்பந்தமாக அப்போது பேசிய அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன், "சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீனும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல.. நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    ராஜாஜி மருத்துவமனை

    ராஜாஜி மருத்துவமனை

    இந்நிலையில், நிர்மலாதேவிக்கு உடம்பு சரியில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் இருந்த நிர்மலாதேவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதில் குழப்பமான தகவல்களும் வெளியாகின.

    சோர்வாகவே இருந்தார்

    சோர்வாகவே இருந்தார்

    ஏற்கனவே சிறையில் அனுமதிக்கப்பட்டது முதல் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தார் நிர்மலாதேவி. எப்போது கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதும் சோர்வாகவே காணப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது என்று அவரது வக்கீல் 2 தினங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், இப்போது நிர்மலாதேவி ஆஸ்பத்திரியில் அனுமதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு நெஞ்சு வலி என்று ஒரு தகவலும், முதுகுவலி என இன்னொரு தகவலும் வெளியாகி குழப்பத்தை கூட்டின. சிகிச்சைக்குப் பின்னர் நிர்மலா தேவி சிறைக்கு திரும்ப கூட்டிச் செல்லப்பட்டு விட்டார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    10 மாதமாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் மர்மமும் புரியாத நிலையில் சமீபத்தில்தான் அரசியல் நோக்கத்தால் தனக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக அவர் கூறிய நிலையில் உடல் நலக்கோளாறு என்று தகவல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பசும்பொன் பாண்டியன்

    பசும்பொன் பாண்டியன்

    இது சம்பந்தமாக அப்போது பேசிய அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன், "சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீனும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல.. நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+