கள்ளழகர் திருவிழா.. மதுரையில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? மாவட்ட நிர்வாகம் போட்ட உத்தரவு!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நாளை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று இரவு முதலே தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டும். இந்த நிலையில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நாளை காலை நடக்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பங்குபெறும் இந்த திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடத்தி முடிவடைந்த நிலையில், தற்போது உச்ச நிகழ்ச்சிக்கு மதுரையே தயாராகி வருகிறது. இதற்காக ஏற்கனவே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வதற்காக, ஏற்கனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகளவிலான கூட்டம் வரும் என்பதால், பொதுமக்கள் புகார் அளிக்க வைகை வீரன் என்ற செயலி போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் போது இளைஞர்கள் எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடக் கூடாது என்றும் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி அதிமுக எம்எல்ஏல்-க்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும், வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறி இருக்கிறது. மதுரையின் முக்கியமான திருவிழா நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாதது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது. ஏனென்றால் வைகை ஆற்றங்கரையோரம் இன்று இரவு முதலே மக்கள் கூடுவார்கள். அப்போது இளைஞர்கள் மதுபோதையில் இருந்தால் அதிகளவில் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications