Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை டூ பசும்பொன்.. ஒரே காரில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் பயணம்.. ஷாக்கில் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் இணைந்து பயணிப்பதாக தெரிய வந்துள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் இருவரும் தேவர் சிலைக்கு இணைந்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தி இருப்பது புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். கோவையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்வதை செங்கோட்டையன் தவிர்த்தார்.

OPS Sengottaiyan Devar Jayanthi

இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தில் திடீரென செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அதன்பின் கோபியில் செங்கோட்டையன் ரோடு ஷோ சென்றதோடு, டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்பின் செங்கோட்டையனின் பாதை எந்தப் பக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. செங்கோட்டையனின் கருத்துக்களுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சட்டசபை கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுகளை செங்கோட்டையன் பின்பற்றினார். இதனால் செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி பக்கம் சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள செங்கோட்டையன் மதுரை வந்தார். இதன்பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி பயணித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பசும்பொன் சென்று தேவரின் சிலைக்கு இணைந்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் சீற்றம் கொண்டு எழுந்த போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் சட்டசபையில் கூட ஓபிஎஸ் தரப்பை சந்திக்கவில்லை. இந்த நிலையில் தேவர் ஜெயந்தியையொட்டி இவர்கள் சந்திப்பு நடந்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய 4 தரப்பும் ஒன்று சேர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைவது அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+