இங்க எதுக்கு வந்தீங்க? மதுரை மேயர் இந்திராணி காரை முற்றுகையிட்ட மக்கள்! சமரசம் பேசிய அதிகாரிகள்!
மதுரை: மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணியை 97-வது வார்டு பொதுமக்கள் முற்றுகையிட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் ஆவேசம் காட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகளும், காவல்துறையினர் சமரசம் பேசி மேயரின் காருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

97-வது வார்டு
மதுரை 97 -வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு இன்று பூமிபூஜை நடைபெற்றது. அதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் ஏறிய மேயர் இந்திராணியை அப்பகுதி மக்கள் சிலர் முற்றிகையிட்டனர்.

எதுக்கு வந்தீங்க
எதற்காக வந்தீர்கள்..? என்ன பூமி பூஜை நடக்கிறது..? இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் என்ன செய்கிறீர்கள்..? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மக்களின் ஆதங்கத்தை புரிந்து அவர்களை சமரசம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் அதை கேட்டதாக தெரியவில்லை. இதனிடையே மேயர் இந்திராணி தனது காரை விட்டு கீழே இறங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் பேச்சு
தேர்தலின் போது 97-வது வார்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல் இருப்பது ஏன் எனவும் வினவினர். மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கத்தை எடுத்துக்கூறி மக்களுக்கு புரிய வைக்க முயற்சித்தனர்.

காருக்குள் அமர்ந்து
இதனிடையே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மேயர் இந்திராணியின் காருக்கு வழிவிடப்பட்டது. மக்களின் குறைகளை காரில் இருந்து இறங்கி செவிமடுத்து உரிய விளக்கம் தர வேண்டிய மேயர் காருக்குள் அமர்ந்தவாறு அங்கிருந்து சென்றிருப்பது 97-வது வார்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications