Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி.. யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டுமாம்! மனைவி திடீர் மனு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டையே அதிர வைத்த கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் குற்றவாளி யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என அவரது மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக் கொண்டிருந்தார்.இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

Petition for Gokulraj murder convict Yuvaraj seeking first class in jail

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. கோகுல்ராஜ் காணாமல் போனதற்கு அடுத்த நாளான ஜூன் 24ஆம் தேதி, பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் உடல் மீட்கப்பட்டது.

தனது மகன் மரணத்தில் சந்தேகம் எழுப்பிய பெற்றோர், இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். ஆனால் யுவராஜ் தலைமறைவானார்.

இரண்டு மாதங்கள் கழித்து சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்த நிலையில், அவரை கைது செய்து பொலீசார் விசாரணை மேற்கொண்டனர். யுவராஜுக்கு எதிராக சாட்சியங்கள் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறின. வழக்கில் யுவராஜ் குற்றவாளி என்று நிரூபிப்பதே மிகுந்த சிரமமானது.

எனவே வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்திலிருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியது.

அதேபோல யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் வந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் கோகுல்ராஜ் தரப்புக்கு பக்க பலமாக அமைந்தது. இதனையடுத்து அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் யுவராஜை குற்றவாளியாக அறிவித்து 3 ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தது.

7 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில், தனது கணவர் வருமான வரி கட்டுகிறார் எனவே அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என்று கேட்டு யுவராஜின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு குறித்து சேலம் ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் கோவை மத்திய சிறை நிர்வாகம் 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+