சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்கள்! மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டாங்க!தட்டித் தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்காக நகர்ப்பகுதியில் சுமார் 50 இடங்களில் சோழவந்தான் போலீசார் சி.சி.டி.வி.கேமராக்களை பொருத்திக் கண்காணித்து வந்தனர்.

Recommended Video

    குடிபோதையில் போலீஸ் அமைத்த சி.சி.டி.வி.கேமராக்களை உடைத்த வாலிபர்கள் - வீடியோ

    சிசிடிவி கண்காணிப்பு காரணமாக அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வது குறைந்த வந்த நிலையில்தான் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த கேமராக்களை தூக்கத் திட்டம் போட்டனர்.

    Police arrested youths who broke CCTV cameras while drunk

    சோழவந்தான் தென்கரை பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்கள் தாங்கள் மது அருந்துவதற்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய அப்பகுதியை சேர்ந்த மணிபிரபு, ஆதிபாபு, ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் சி.சி.டி.வி கேமராக்களை நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் அடித்து நொறுக்கியுள்ளனர்.

    சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு மூவரும் ஜாலியாக சுற்றித் திரியும் காட்சிகள் அங்கு இருந்த மற்றொரு சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கண்காணித்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சி.சி.டி.வி கேமரா இருப்பது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சி.சி.டி.வி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மூவரையும் கைது செய்த சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+