மதுரை மீனாட்சியம்மன் கோயில் எப்படி இருந்தது? "தெய்வீக அனுபவம்" ஜனாதிபதி திரெளபதி முர்மு பதிவு!
மீனாட்சியம்மன் கோயில் அனுபவம் பற்றி ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகைப் பதிவேட்டில் எழுதியுள்ளார்.
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியது தெய்வீக அனுபவத்தை கொடுத்ததாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கருத்து பதிவிட்டுள்ளார். அதேபோல் நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக கூறியுள்ள திரெளபதி முர்மு, பிரம்மாண்ட கோபுரங்கள், கற்சிலைகள், கட்டிடக் கலை பற்றி வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் கோவை ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து 2 நாள் பயணமாக அவர் தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தந்தார். ஜனாதிபதியாக தேர்வான பிறகு அவர் முதல் முதலாக தமிழ்நாட்டுக்கு இன்று வந்தார்.

மதுரையில் திரெளபதி முர்மு
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட குடியரசுத் தவைர் திரெளபதி முர்மு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார்.

மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு
பின்னர் 12 மணியளவில் அம்மன் சன்னதி வாசல் வழியாக கோயிலுக்குள் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அம்மன் சன்னதி, கொடிமரம், துர்க்கை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்த திரெளபதி முர்மு, மீனாட்சி அம்மன் கோயில் வருகைப் பதிவேட்டில் தமது அனுபவத்தை குறிப்புகளாக எழுதினார்.

தெய்வீக அனுபவம்
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எழுதிய அனுபவ குறிப்புகள் வெளியாகியுள்ளது. மீனாட்சியம்மன் கோயில் பற்றி எழுதியுள்ள அவர், பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாண்ட கோபுரங்கள், கலைநயமிக்க கற்சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை தெய்வீக அனுபவத்தை கொடுத்துள்ளன. நாட்டு மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன் என்று கையெழுத்திட்டுள்ளார்.

குழந்தைகளை வாழ்த்திய ஜனாதிபதி
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரை காண மதுரையின் மாட வீதிகளில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் அரசினர் மாளிகைக்கு திரெளபதி முர்மு புறப்பட்டார். அப்போது கீழவெளி வீதிகளில் குழந்தைகள், மாணவர்கள் நின்று கையசைத்தனர். இவர்களை பார்த்த திரெளபதி முர்மு, திடீரென காரில் இருந்து இறங்கி குழந்தைகளுக்கு கை குலுக்கி, வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவரை திடீரென சந்தித்த குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.
-
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications