மோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்... மதுரை ஹைகோர்ட் அனுமதி
மதுரை: மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி 27-ந்தேதி மதுரை வருகிறார். இதனால், பாஜகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்தநிலையில், மதுரையைச் சேர்ந்த தேவேந்திரகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கஜா புயல் சேதத்தை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை என்று குற்றசாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு திணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என தெரிவித்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.