மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை பக்கத்தில் வரவிடாமல்.. மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி..!
மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
எப்போதும் தன்னை சுற்றி நிற்கும் பாதுகாப்பு அதிகாரிகளை இன்று சற்று தள்ளியே வைத்திருந்தார் ராகுல்.
இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக ராகுலை சந்திக்க முடிந்த காட்சிகளை மதுரையில் காண முடிந்தது.

பந்தா இல்லை
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார் ராகுல். இதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த அவர் அதற்கு பிறகு தென் பழஞ்சி என்ற ஊருக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் முறையை கவனித்தார்.

மக்களுடன் மக்களாக
பின்னர் அங்கு மக்களுடன் மக்களாக மதிவு உணவு சாப்பிட ராகுல் அமர்ந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த தென்பழஞ்சி கிராம மக்கள் ராகுல்காந்தியுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிட போட்டி போட்டனர். இதேபோல் இளைஞர் காங்கிரஸில் உள்ள ஏராளமான இளைஞர்கள் ராகுல்காந்தியுடன் செல்ஃபி எடுக்க விரும்பினர்.

ராகுல் அனுமதி
இதனை அறிந்த ராகுல்காந்தி தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பிய இளைஞர்களை அருகில் அழைத்து செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு போஸ் கொடுத்தார். அப்போது ராகுலை சுற்றி கூட்டம் நெருக்கியடித்ததை பார்த்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவர்களை விலக்க முயன்றார். ஆனால் அதனை தடுத்த ராகுல் இளைஞர்கள் விரும்பியபடி அவர்களுடன் செல்ஃபி எடுத்து பின்னரே அங்கிருந்து புறப்பட்டார்.

ராகுல் புகழாரம்
ராகுல்காந்தியின் இந்த எளிய அணுகுமுறையை கண்ட பொதுமக்களும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்தளவுக்கு அவர் எளிமையான மனிதராக இருப்பார் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறிக்கொண்டனர். டெல்லி விமானம் ஏறுவதற்கு முன்னர் மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார்கள் தமிழக மக்கள் என புகழாரம் சூட்டிச் சென்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications