கொரோனா நிவாரணமாக ரூ 5000 வழங்கிய ராஜீவ்காந்தி கொலை வழக்கின் சிறைவாசி ரவிச்சந்திரன்
மதுரை: கொரோனா நிவாரணமாக ரூ 5 ஆயிரத்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக 7 தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தினரும் தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி இரவு நேர காவலர்கள், சிறு குழந்தைகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என நிதியுதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரன், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 5000 வழங்கியுள்ளார்.
சிறையில் தான் வேலை செய்ததால் கிடைத்த ஊதியத்தை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர் இதற்கு முன்னர் ஹார்வார்டு தமிழ் பல்கலைக்கழக இருக்கைக்கு ரூ 20 ஆயிரமும், கஜா புயலுக்கு ரூ 5 ஆயிரமும் கொடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications