கஜா புயலுக்கு நிதி வழங்கினார் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன்
மதுரை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன், கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண நிதிக்காக ரூ. 5 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை ஓய்ந்தாலும் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டு நிறுவனங்கள் என நிதியுதவியையும், நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

வேதனை
இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் டிவிகளில் வெளியாகின்றன. இதை ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பார்த்துவிட்டு சக கைதிகளிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

ரூ.5 ஆயிரம்
அப்பகுதி மக்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்ய நினைத்தார். அந்த வரையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் சிறையில் பணிபுரிந்தமைக்காக வழங்கப்பட்ட ஊதியத்தில் ரூ. 5 ஆயிரத்தை புயல் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

வெடிகுண்டு
இதை தனது வழக்கரைஞர் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார். அப்போது வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சிறையில் தண்டனை
இந்த வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தீர்மானம்
இந்நிலையில் இவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. ரவிச்சந்திரன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications