குளறுபடிகள் ஏதுமில்லை... தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது... தங்க தமிழ்ச்செல்வன் காட்டம்
மதுரை: தேனி தொகுதியில் குளறுபடிகள் ஏதுமின்றி தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெரிவித்துள்ளார்.
தவறு நடந்த 46 இடங்களில் 3லும், ஏற்கனவே பரிந்துரைத்த 10 இடங்களையும் சேர்த்து 13 இடங்களிலும் மே.19ல் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக விளக்கமளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மே 6-ல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கை அடிப்படையில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
அந்தவகையில், தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 67-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதே போல், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம்
இந்தநிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்து வருவதாகவும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

உண்மையில்லை
திமுகவில் தான் இணையப்போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை எனக் கூறிய அவர், என்றுமே திமுக தங்களுக்கு எதிரி என்றும், எடப்பாடி பழனிச்சாமி தங்கள் துரோகி எனவும் கூறினார்.

அவசியமற்றது
மேலும், தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது எனக் கூறிய அவர், இதற்காக லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

பலவீனமாகவே இருக்கும்
முன்னதாக, வாக்கு எண்ணிக்கையான வருகிற 23-ந்தேதிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு புறப்பட வேண்டியது தான். மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும் என்றும் அவர் பேசினார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications