ரியல் எஸ்டேட் மோசடி.. ரூ. 5000 கோடி ஏமாற்றிய நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
மதுரை:நிலத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புகாரில் சிக்கியுள்ள நிறுவன இயக்குனர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
நிலம் வாங்கித் தந்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக சொல்லி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த ஓராண்டு காலமாகவே புகார் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிறுவனம் பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில், இன்று நியோ மேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வீரசக்தி உள்பட மூன்று பேர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர், ஜெயசங்கீஸ்வரன் ரூ.73.50 லட்சத்தை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். வட்டியும் தரவில்லை முதலீடு செய்த பணத்தையும் தரவில்லை என்கிற புகார் காரணமாக, மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி குப்புசாமி தலைமையில் நடைபெற்ற சோதனையில் நியோ மேக்ஸ் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் முறைகேடு நடந்தது ஊர்ஜிதமானது. மேலும், நெல்லை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என பல ஊர்களில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். நியோ மேக்ஸ், சென்ட்ரியோ ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்லை கிளை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே அந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் நிறுவன பங்குதாரர்களின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டதாகவே கணக்கில் காட்டி மோசடி செய்திருக்கின்றனர் என்று முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். தங்களின் முதலீடு திரும்ப கிடைக்குமா? பல லட்சம் பணம் திரும்ப வருமா என்று கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications