சாத்தான்குளம் தீர்ப்பு! வெள்ளைச் சீருடையில் 9 போலீஸார்! தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 9 போலீஸாரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனராம். மேலும் அவர்கள் தற்போது தண்டனை கைதிகள் என்பதால் அவர்களுக்கு கைதிகளுக்கான வெள்ளை சீருடை வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகனை கொடூரமாக அடித்துக் கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து ஆகியோருக்கு நேற்றைய தினம் தண்டனை அறிவிக்கப்பட்டது.

அவர்கள் 9 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனையை நீதிபதி முத்துக்குமரன் வழங்கினார். அதாவது தனித்தனியே தண்டனை என்ற பெயரில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் தனித்தனியே அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாது பலரும் வரவேற்றுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கில் 9 பேருக்கும் எப்போது தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சாத்தான்குளம் சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
9 பேருக்கும் இதுவரை காவல் துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் பிழைப்பூதியம் நிறுத்தப்படும். இவர்கள் 9 போலீஸாரும் இனி கடும் குற்ற வழக்கின் கைதிகளாகவே கருதப்படுவர்.
காலையில் விசாரணை கைதிகளாக சென்ற 6 பேரும் மாலையில் தண்டனை கைதிகளாக மதுரை சிறைக்கு திரும்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக சில ஆண்டுகளாகவே சிறையில் தண்டனை பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், ரகு கணேஷும் தனி செல்லில் உள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள தனி செல்லில் உள்ளனர். இவர்கள் யாரும் தற்கொலை போன்ற விபரீத முடிவை எடுக்கக் கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் சிறை காவலர்கள் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.
மரண தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 9 பேரும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். தண்டனை கைதிகள் என்பதால் இவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் வெள்ளை சீருடைக்கான துணி வழங்கப்பட்டது. அதை சிறையில் உள்ள டெய்லரிடம் கொடுத்து தைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பு.. மீண்டும் உயிர்த்தெழும் ஜெய்பீம் சம்பவம்! முடிவு எப்போது? -
சாத்தான்குளம் வழக்கு: உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்பதை ஏற்க முடியாது.. நீதிபதி சொன்ன முக்கிய பாயிண்ட் -
தென்காசி அருகே துப்பாக்கிச்சூடு.. போலீஸ் எஸ்.ஐ-யை தாக்கிய ’கள்’ வியாபாரி சுட்டு பிடிப்பு.. ஆலங்குளத்தில் பரபரப்பு -
காவல் நிலைய மரணங்களில்.. இதுபோன்று நடப்பது அரிது! நீதிபதி சொன்ன பாயிண்ட்! கடும் தண்டனை இதுக்குதான்! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு?












Click it and Unblock the Notifications