Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் வழக்கு.. மரண தண்டனைதான் தீர்வா? முன்னாள் காவல் அதிகாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்திருக்க கூடாது நாம் விரும்பினோம்.. அப்படி இருக்கையில், அந்த தவறுக்கு மரணம்தான் தீர்வா? என்று முன்னாள் ஏசிபி ராஜேந்திர ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த, ராஜேந்திர ராஜா தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்திருந்தார். குறிப்பாக மரண தண்டனை குறித்து விரிவாக பேசியிருந்தார்.

Sathankulam Verdict

அவர் பேசியதாவது, "வழக்ககளில் தண்டனை என்பது ரொம்பவும் முக்கியமானது. இதுபோன்ற சமூக குற்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர் ப.பா.மோகன் போன்றோர் கூட, ஆயுள் தண்டனையை பற்றிதான் பேசுகிறார்கள்.

கொடிய சமூக குற்றத்திற்கு அயுள் தண்டனை கிடைக்கிறது எனில், அந்த தண்டனை சமூகத்தில் பேசுபொருளாகவே இருக்கும். இந்த வழக்கில் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது எனில், தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் மூலமாக சமூகத்தில், தண்டனையும் அதற்கான காரணமும் பேசு பொருளாகவே இருக்கும். இந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு அயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று பேசப்படும்.

ஆனால், இதுவே இவர்களை தூக்கில் போட்டுவிட்டால், நாளையோ அல்லது இன்னும் சில நாட்கள் கழித்தோ, இந்த செய்தி பழைய செய்தியாய் போய் மறைந்துவிடும்.

எனவேதான் பல நாடுகளில் தூக்கு தண்டனை வேண்டாம், ஆயுள் தண்டனை மட்டும் போதும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த காரணத்திற்காகத்தான் 1846ல் மெக்சிகன் சட்டமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்திவிட்டது. இப்படியாக உலகம் முழுவதும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாளர், எதிர்ப்பாளர் என்று 2 பிரிவுகள் இருக்கின்றன. இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தூக்கு தண்டனைக்கு ஆதரவு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

சமூகம் சீர்திருத்தப்பட்ட வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்டிருக்கக்கூடாது என்பதுதான் இந்த வழக்கு. ஜெயராஜும், பென்னிக்ஸும் கடையை மூடியிருந்தால், அவர்களை திருத்தியிருக்கலாம், கொல்லப்பட்டிருக்க கூடாது என்பதுதான் இந்த வழக்கு. இப்படியான வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை தனிப்பட்ட கருத்திலிருந்து சரியா? தவறா? என்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி இருக்கும்போது, இதற்கு இதுதான் தீர்வு சொல்வது சரியில்லை" என கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+