அதிக அளவில் குவிந்த இந்துத்துவ அமைப்பினர்.. திடீரென பதற்றமான திருப்பரங்குன்றம்! 144 தடை விதிப்பு
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காலங்காலமாக, மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகில் இன்று தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தீப தூணில் தீபம் ஏற்றவில்லை என்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியிருந்தார்.

இதனையடுத்து CISF வீரர்களை அழைத்துக்கொண்டு தீபம் ஏற்ற நீதிபதி மனுதாரருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
Protests break out at the Tiruparankundram hill temple in Madurai as the Deepam that was to be lit in the Deepathoon didn’t happen DESPITE the Madras HC order pic.twitter.com/jBiPtSwLzX
— Akshita Nandagopal (@Akshita_N) December 3, 2025
முன்னதாக தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும், தீபம் ஏற்றவில்லை என்று கூறி, மலை மீது ஏற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். இதனையடுத்தே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications