எங்களை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து களத்தில் இருப்போம்.. பின்னடைவிலும் துவளாமல் பேசும் சீமான்!
மதுரை: எங்களை ஏற்பதும், ஏற்காமல் விடுவதும் மக்களின் பிரச்சினையாகும். ஆயினும் தொடர்ந்து களத்தில் நிற்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துவளாமல் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 எம்பி தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. இதில் 38 தொகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ஆவது இடத்தை பிடித்தது.
38 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 15 லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எத்தனை தோல்வி வந்தாலும் துவளமாட்டோம். வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியிருந்தார்.

தீபலட்சுமி
அதுபோல் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கும் அவர் நிச்சயமாக என பதிலளித்திருந்தார். இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தீபலட்சுமி என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

திமுக அதிமுக
இதற்கான தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடந்து முடிந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு வித்தியாசம்
இதில் மூன்றாம் இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இதன் வாக்கு சதவீதமும் 2.6 ஆக உள்ளது. இந்த வாக்குகள் நிச்சயம் திமுக, அதிமுகவின் வாக்கு வித்தியாசத்தை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளது.

களத்தில் நிற்போம்
இதுகுறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவர்களது பிரச்சினை. எனினும் நாங்கள் தொடர்ந்து களத்தில் இருப்போம்.

மன்னிக்க வேண்டும்
அதிமுக பணம் கொடுத்தவர்கள் ஆளும் கட்சி. குறைவாக பணம் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைதான் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் எதிர்த்தவர்களை மோடி ஏன் மன்னிக்க வேண்டும் என தெரியவில்லை? பணப்பட்டுவாடா இல்லாமல் போட்டியிட்டால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகும் என்றார் சீமான்.
-
“எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லைனா போ.. தெம்பு இருக்கிறவர நின்னு கத்தி செத்துக்கூட போவேன்” - சீமான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications