எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே.. செங்கோட்டையனை நினைத்தால்.. சீண்டிய நயினார் நாகேந்திரன்!
மதுரை: மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை நினைத்து வருத்தமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக செங்கோட்டையனை நன்றாக தெரியும் என்று கூறிய நயினார் நாகேந்திரன், என்டிஏ கூட்டணியின் அனைத்து முடிவுகளும் தமிழ்நாட்டிலேயே எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நயினார் நாகேந்திரன் கூறிய ஒரு வார்த்தையால், அவரை டெபாசிட் இழக்க செய்வோம் என்று செங்கோட்டையன் முழங்கி இருந்தார். தற்போது அமமுக கூட்டணிக்கு வந்த சூழலில், நயினார் நாகேந்திரன் மீண்டும் சீண்டிருக்கிறார்.

அதேபோல் தவெக நிர்வாகி செங்கோட்டையன், தவெக கூட்டணி பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று புலம்பி இருந்தார். இந்த நிலையில் மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணன் செங்கோட்டையனை எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன்.
எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் என்ற வருத்தம் தான். தமிழ்நாட்டின் கூட்டணியில் டெல்லி எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. பாமக கூட்டணியை இறுதி செய்தது எடப்பாடி பழனிசாமி தான். டிடிவி தினகரன் கூட்டணியும் சென்னையில் தான் இறுதி செய்யப்பட்டது. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த வகையில் சரி என்பது தெரியவில்லை.
ஓபிஎஸ் குறித்து எந்தக் கருத்தையும் இப்போது சொல்ல முடியாது. எங்கள் கூட்டணியில் ஓபிஎஸ் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது ஓபிஎஸ் கூட்டணிக்கு வருவதும், வராததும் காலம் தான் சொல்ல வேண்டும். என்டிஏ கூட்டணியை நோக்கி ஒவ்வொரு கட்சியாக வந்து கொண்டே இருக்கிறது. திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்ததே இல்லை.
எம்ஜிஆர் காலத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது திமுக தான். 1972க்கு பின் எம்ஜிஆரிடம் தோற்றுக்கொண்டே இருந்தார்கள். அதேபோல் அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் தொடக்கம் முதலே கூறி வருகிறேன். டிடிவி தினகரனின் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு என்ற கருத்துக்கு இப்போது என்னால் கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் பக்கம் ஓபிஎஸ் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications