உச்சிக்கு ஏறிய தாத்தாவின் காமம்.. 10 வயது பிஞ்சு.. தொடர்ந்து 3 முறை.. கொந்தளிப்பில் மதுரை.. கைது
10 வயது சிறுமியை 58 வயது தாத்தா வன்கொடுமை செய்துள்ளார்
மதுரை: 58 வயசு தாத்தாவுக்கு உச்சிக்கு ஏறிய காமம்.. 10 வயது பேத்தியை தொடர்ந்து 3 முறை நாசம் செய்து சீரழித்துள்ளார்.. அம்மா.. அந்த இடத்தில் வலிக்குது என்று குழந்தை அழுததை கேட்டு பெற்ற தாய் துடிதுடித்து போய்விட்டார். மதுரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெரியார் பஸ் ஸ்டேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர்.. 58 வயசாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 10 வயதில் ஒரு பேத்தி இருக்கிறாள். அடிக்கடி பேத்தியின் தோழிகள் இவர்கள் வீட்டில் வந்து விளையாடுவது வழக்கம் போலும்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜஹாங்கீர் தன்னுடைய பேத்தியிடம், அவரது 10 வயது தோழியை பார்க்க வேண்டும், வீட்டுக்கு அழைத்து வா என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். தாத்தா இப்படி சொன்னதும், அந்த குழந்தையும் விஷயம் தெரியாமல் தோழியிடம் சென்று, அவர்களின் பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி, தன் வீட்டுக்கு வர சொல்லி அழைத்து வந்துள்ளது.
வீட்டுக்கு வந்ததுமே அந்த தாத்தா பேத்தியின் தோழியை படுநாசமாக்கி உள்ளார்.. வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வைத்துள்ளார்.. பயந்துபோன அந்த குழந்தை யாரிடமும் வெளியில் சொல்லாமல் இருந்தது.. இதை கவனித்த தாத்தாவுக்கு இன்னும் தைரியம் ஆகிவிட்டது.. அதனால் திரும்ப திரும்ப 3 முறை குழந்தையை கதற கதற சீரழித்துள்ளார்.
இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட இடத்தில் ரொம்ப வலிக்கிறது என்று தன் அம்மாவிடம் சொல்ல, அப்போதுதான் என்ன ஏதென்று விசாரிக்கவும், நடந்ததை சொல்லி குழந்தை அழுதிருக்கிறாள்.. இதை பற்றி பெற்றோர் உடனடியாக அந்த பகுதி ஸ்டேஷனில் புகார் செய்யவும், அன்றே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. ஜஹாங்கர் தாத்தா இப்போது கம்பி எண்ணுகிறார்!












Click it and Unblock the Notifications