வாரா வாரம் கோவிலுக்கு போவேங்க.. மதுரை மீனாட்சி கோவிலை செப்பனிட நடவடிக்கை- பழனிவேல் தியாகராஜன் பளிச்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும், தனக்கு கடவுள் பக்தி இருப்பதாகவும், வாரத்திற்கு ஒருமுறையாவது கோவிலுக்கு செல்வது தனது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் அமைச்சரவையில், நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவான, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
நேற்று அமைச்சரவை பதவியேற்ற நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தனது கோவில் மற்றும் கடவுள் நம்பிக்கை பற்றி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி
தேர்தலில் போட்டியிடும்போது பழனிவேல் தியாகராஜன், வாக்காளர்களுக்கு மூன்று வாக்குறுதிகளை அளித்தார், "ஒருங்கிணைந்த கழிவுநீர் அமைப்பு, ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், ஒவ்வொரு நபருக்கும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, ஆகிய வாக்குறுதிகளை தாண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுப்பிக்கப்படும் என்பதும் அவரது வாக்குறுதி. ஏனெனில் மதுரை மத்திய தொகுதியில்தான், மீனாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தாத்தா காலத்தில் கும்பாபிஷேகம்
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்குமான உறவு நீண்ட நெடியது. 1963 ஆம் ஆண்டில், பழனிவேல் தியாகராஜன் தாத்தா பி.டி.ராஜன், மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் தான் அதைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார் பழனிவேல் தியாகராஜன்.

கருணாநிதிக்கும் தெரியும்
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், திமுகவின் கடவுள் மறுப்பு நிலைப்பாட்டிற்கும் எனது பக்திக்கும் இடையில் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. கடவுள் மீதான எனது பக்தி பற்றி கருணாநிதியும் அறிந்திருந்தார். எனது தந்தை 2006ல் காலமான பிறகு, ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமாவது, கோவிலுக்கு வருவதாக சபதம் எடுத்தேன். கடந்த 15 ஆண்டுகளாக, நான் எந்த ஊரில் இருந்தாலும், அந்த வாக்குறுதியை மறந்தது இல்லை. ஓரிரு முறைதான் கோவில் செல்ல முடியாமல் போயிருக்கும். நான் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விரும்பியதற்கு, அதற்கு, மீனாட்சியம்மன் கோவில் இருப்பதுதான் காரணம். கருணாநிதிக்கும் அது தெரியும் என்றார்.

சபரிமலை ஐயப்பன்
பி.டி.ஆரின் குடும்பம் சபரிமலை ஐயப்பன் கோவிலுடனும் பாரம்பரிய உறவை பேணி வருகிறது. நீதிக் கட்சியை நிறுவியவர், தியாகராஜனின் தாத்தா, பி.டி.ராஜன். ஆனால் அவர்தான், ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்பன் சிலை வழங்கியவர். 1950களில் சபரிமலையில் நடந்த ஒரு பெரிய தீ விபத்துக்குப் பிறகு, ஐயப்பன் சிலையை நன்கொடையாக வழங்கினார் பி.டி.ராஜன். "தீ விபத்துக்குப் பிறகு, பந்தளம் மன்னரும், பிரதான குருக்களும் ஒரு ஜோதிடரை சந்தித்தனர். அவர்தான், எங்கள் தாத்தாவை அணுகுமாறு கூறியுள்ளார். எனவே தாத்தாவும், ஐயப்பன் சிலையை வழங்கினார் என்று புன்முறுவலுடன் சொல்கிறார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications