Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு! இடஒதுக்கீடு மீதான கூட்டு தாக்குதல்!” - சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு, தேர்வர்களின் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், சமூக வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் கட் ஆப் மதிப்பெண் குறிப்பிடப்படாமல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, தேர்வு முறைமைக்கு எதிரான கூட்டுத்தாக்குதல் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

அதாவது, “பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் 300 உள்ளூர் மட்டத்திலான அலுவலர்கள்(Local Bank Officers) பணி நியமனத்திற்கான அறிவிக்கை ஆகஸ்டு 31, 2024 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 9, 2024 இருந்தது. அக்டோபர் 10, 2024 அன்று ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் அடுத்த கட்டத்திற்கு 1,305 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் நவம்பர் 27, 2024 அன்று வெளியானது.

su venkatesan indian bank


ஒவ்வொரு தேர்விலும் எவ்வளவு மதிப்பெண் வரையில் எடுக்கப்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது வங்கிப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஐபிபிஎஸ்(Indian Banking Personnel Selection) என்ற அமைப்பு ஒவ்வொரு முறையும் "கட்-ஆஃப்" மதிப்பெண்களை வெளியிட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களைத் தேர்வு செய்யும் தேர்வாணையங்களும், முடிவுகள் வெளியாகையில் மதிப்பெண்களையும், எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வாகியுள்ளார்கள் என்பதையும் வெளியிடுகின்றன. ஆனால், பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வெளியாகவில்லை.

அறிவிக்கையில், 'தேர்வர்கள் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு விண்ணப்பிக்கும் தேர்வர், பிற மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியிழந்தவராவார். மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப்பட்டியல் மாநில வாரியாக மற்றும் பிரிவு வாரியாகத் தயாரிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேர்வு முடிவுகளில் மாநில வாரியான மற்றும் பிரிவு வாரியான மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இல்லாமல் தகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில், இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தபோதெல்லாம் இட ஒதுக்கீடுகளில் தவறுகள் செய்யப்பட்டிருந்தன. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் அந்தப் பிரிவினருக்கான இடங்களைத் தராமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்பிரிவில் சேர்க்கப்படாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவுப் பணியிடங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இது இட ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானதாகும். சமூக நீதிக்காகப் போராடும் அமைப்புகள் தலையிட்டதால் அந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டன. ஆனால் தேர்வு நடைமுறையில் அது போன்ற பிரச்சனை மீண்டும் வந்துள்ளது.

தேர்வின் அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியல் இந்தியன் வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்களின் சமூகப் பிரிவு என்ன என்பது அதில் குறிப்பிடாததால், அந்தப் பட்டியல் முழுமையானதாக இல்லை. சமூகங்களைக் குறிப்பிட்டு பட்டியல் வெளியிடப்பட வேண்டும். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களும் தரப்படவில்லை.

குறைந்தபட்சம், முதல் கட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண்களையாவது தந்திருக்க வேண்டும். அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களுக்கு, அந்தக் கட்டம் நிறைவு பெற்ற பிறகு மதிப்பெண்கள் வழங்குவது அவசியமாகும்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக, எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் 1:10 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இங்கு 1,305 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் கூட, மாநில வாரியாக மற்றும் சமூகப் பிரிவு வாரியாக இருக்க வேண்டும். இது தீவிரமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

தேர்வு நடைமுறையைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இது போன்ற பணியிடங்களுக்கு(Officers) முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நல்ல, திறமையுள்ள தேர்வர்களைக் கண்டறிய அந்த நடைமுறை உதவுகிறது.

இதனால்,

1. மாநில மற்றும் சமூகப் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

2. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரத்தை பரிசீலிக்க வேண்டும்.

3. தகுதிப் பட்டியலில் அவரவர் பெயர்களுக்கு எதிரில் சமூகப் பிரிவைக் குறிப்பிட வேண்டும்.

4. அனைத்துத் தேர்வர்களுக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை வழங்குதல் அவசியம்.

5. ஒட்டுமொத்தத் தேர்வு முறையைப் பரிசீலிக்கத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்டவைகளை இந்தியன் வங்கி சேர்மன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்” என்று தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+