இன்னும் செய்யுங்க.. அநீதியின் கைகளில் காலம் கட்டுண்டு கிடந்த வரலாறே இல்லை.. கொந்தளிக்கும் வெங்கடேசன்
காந்தியின் மலரஞ்சலி ரத்து செய்யப்பட்டதற்கு எம்பி வெங்கடேசன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
மதுரை: தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை கொரோனாவைக் காரணங்காட்டி மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு எம்பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது.. இருந்தாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.. அதேபோல லாக்டவுன் 5.0 தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் தொற்று தாக்கம் பெருகி வருவதுடன், குணமாகி வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகித்தான் வருகிறது. இதனால், முக்கியமான நிகழ்வுகள், ஆலோசனை கூட்டங்கள், எல்லாமே வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் நடந்து வருகிறது... ஜூம் ஆப் மூலம் இந்த கூட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாளை மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.. வழக்கமாக மகாத்மாவின் பிறந்த நாளை நாடே கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.. நாடாளுமன்ற வளாகத்தில் உள் காந்தியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவதும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.. ஆனால் தற்போது தொற்று வீரியம் அதிகரித்துள்ளதால், மலரஞ்சலி ரத்தாகி உள்ளது.
இதற்கு மதுரை எம்பி வெங்கடேசன், ஆதங்கத்துடன் ட்வீட் போட்டுள்ளார்.. "தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை #Corona காரணங்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய அரசு.. இன்னும் செய்யுங்கள்... ஆனால் காலம் அநீதியின் கைகளில் என்றென்றும் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை; புராணங்களும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

வெங்கடேசனின் இந்த ட்விட்டுக்கு பலரும் தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.. "அயோத்தி கோயில் கட்ட பூஜை நடத்த கொரானா தடையில்லை... அவர்கள் வைத்தது தான் சட்டம், திட்டம் எல்லாம்" என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.
எனினும், 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, காந்தி பிறந்த தினமான ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத வகையில் "தூய்மை இந்தியா திட்டம்" கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications