தமிழகத்தில் முதல்முறையாக.. மேலே விமான ஓடுதளம்.. கீழே 4 வழிச்சாலை.. சூப்பராக மாறப்போகும் மதுரை
மதுரை: மதுரை விமான நிலையம் விரிவாக்கப்பட உள்ளதால் அதன் அருகில் உள்ள சுற்றுச்சாலை பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதையடுத்து விமானகள் வந்து செல்லும் ஓடுதளத்திற்கு கீழ் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், அதாவது 1942ல் மதுரையில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது. முதற்கட்டமாக சென்னை-மதுரை-திருவனந்தபுரம் இடையே விமானம் இயக்கப்பட்டது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டது.
மதுரை விமான நிலையம் தற்போது 2 டெர்மினல்களுடன், மதுரை விமான நிலையம் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக பெரிய விமான நிலையமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

விரிவாக்கம் பணி
மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், ராஜமுந்திரி, திருப்பதி போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போது 7 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்தில் இருக்கிறது. இதனை 12 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அத்துடன் பணிகளும் தொடங்கின. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக விரிவாக்கம் தாமதமாகியது.

166 கோடி இழப்பீடு
விமான நிலைய விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள அயன்பாப்பாக்குடி, பெருங்குடி உள்பட 6 கிராமங்களில் இருந்து சுமார் 460 ஏக்கர் பட்டா நிலங்களும், 615 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்படுகிறது நில உரிமையாளர்களுக்கு ரூ.166 கோடி ஒதுக்கீடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது 90 சதவீத கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளது.

ஜெர்மன் பாணியில் சாலை
விமான ஓடுதள விரிவாக்கம் காரணமாக மதுரை சுற்றுச்சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்களுக்கு சிக்கல் ஏற்படும். எனவே சுற்றுச்சாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெர்மனியில் உள்ள லெய்சிக் விமான நிலைய ஓடுதளத்திற்குள் கீழ் சாலை உள்ளது. அதாவது மேல் சாலையில் விமான ஓடுதளமும், கீழ் சாலையில் வாகன போக்குவரத்தும் இருக்கிறது. அதே போல் பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி லால்பகதூர் விமான நிலையமும் மேல்புற சாலையில் ஓடுதளமும், கீழ்புறத்தில் வாரணாசி- லக்னோ நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படிருக்கிறது.

மேலே விமானம்
இதே முறையில் மதுரையில் விமான ஓடுதளம் மேல்புறமும், கீழ்புறம் ரிங்ரோடு நான்குவழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் ஆகியோர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் ரமேஷ், சவுந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம் குறித்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் உதயகுமார்
கூட்டத்திற்கு பின் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்யும் வகையில் ரன்வேயை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது.. ஓடுதளம் விரிவாக்கத்திற்காக வாரணாசி விமான நிலையத்தை போல அண்டர்பாஸ் முறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ் பகுதியில் ரிங்ரோடு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருககிறது. இது குறித்து முழு அளவிலான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications