Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் அங்கீகாரம் பெற்ற கட்சியா? எந்த சட்டத்தில் பதிவு?ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது? தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அரசியல் கட்சியா? என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.

மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். தொடக்க நாளான விஜயதசமி அன்று ஊர்வலங்கள் நடத்துவது வழக்கம்.

Tamil Nadu Govt raises questions on RSS in permission seeking to procession Case

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. அப்போதைய பதற்றமான சூழ்நிலைகளால் போலீசார் அனுமதி தர மறுத்தனர். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றன. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இந்த ஆண்டும் அக்டோபர் 22-ந் தேதி தமிழ்நாட்டின் மொத்தம் 14 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக போலீசில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஒரு அரசியல் கட்சி எனில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டது.

மேலும் ஆர்.எஸ்.எஸ். பேரணி, ஊர்வலத்தில் யார் யார் பங்கேற்பர்? மொத்தம் எத்தனை பேர் பங்கேற்க கூடும்? ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடியும் என்கிற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேரணிக்கு தமிழ்நாடு அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் பேரணி தொடர்பான முழுமையான விவரங்களுடனும் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+