ஆர்எஸ்எஸ் அங்கீகாரம் பெற்ற கட்சியா? எந்த சட்டத்தில் பதிவு?ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி
மதுரை: ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது? தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அரசியல் கட்சியா? என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். தொடக்க நாளான விஜயதசமி அன்று ஊர்வலங்கள் நடத்துவது வழக்கம்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. அப்போதைய பதற்றமான சூழ்நிலைகளால் போலீசார் அனுமதி தர மறுத்தனர். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றன. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டும் அக்டோபர் 22-ந் தேதி தமிழ்நாட்டின் மொத்தம் 14 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக போலீசில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஒரு அரசியல் கட்சி எனில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். பேரணி, ஊர்வலத்தில் யார் யார் பங்கேற்பர்? மொத்தம் எத்தனை பேர் பங்கேற்க கூடும்? ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடியும் என்கிற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரணிக்கு தமிழ்நாடு அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் பேரணி தொடர்பான முழுமையான விவரங்களுடனும் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications