Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் காவல்துறை இபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா? சந்தேகம் வருவதாக அமமுக விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இன்னும் காவல்துறையை பொறுத்தமட்டில் எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது என்று அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்பட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி மீது அவதூறு பேச்சு

எடப்பாடி மீது அவதூறு பேச்சு

முன்னதாக விமான நிலையத்தின் உள் வளாகத்திற்குள் பேருந்தில் பயனம் செய்து கொண்டிருந்தார். பேருந்தில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தார் அப்போது அவரது அருகில் நின்ற வாலிபர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியிருந்தார். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அவதூறாக பேசிய நபரை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மதுரை விமான நிலையத்தில்..

மதுரை விமான நிலையத்தில்..

இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு சொந்த ஊருக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 மகேந்திரன் குற்றச்சாட்டு

மகேந்திரன் குற்றச்சாட்டு

இவ்விவகாரம் தொடர்பாக ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோ மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுவை அளித்து இருந்தனர். இந்த புகாரின் பேரில் அரசியல் கட்சி தலைவரை பொதுவெளியில் அவதூறாக பேசியதாக ராஜேஸ்வரன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை கடுமையாக விமர்சித்த அமமுக, காவல்துறை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக கூறியது. இது தொடர்பாக அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ?

எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ?

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மகேந்திரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இன்னும் காவல்துறையை பொறுத்தமட்டில் எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது" என்றார். இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரன் அவனியாபுரம் போலீசில் நேற்று மாலை ஒரு புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், அவரது பாதுகாவலர் மற்றும் சிலர், என்னை தாக்கியதுடன், என்னிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்றனர். மேலும் என்னையும் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+